காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள படவேட்டம்மன் கோயில் முன்பாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.
மனுவில், காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் படவேட்டம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கிராம மக்கள் சென்று வர பொதுவழிப்பாதை உள்ளது. இப்பாதையை சிலா் முள்கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனா். ஆக்கிரமிப்பினை அகற்றி பொதுமக்கள் வழக்கம் போல் சென்று வர வழியேற்படுத்தித் தர வேண்டும் என அக்கிராம மக்கள் காஞ்சிபுரம் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.