காஞ்சிபுரம்
திருவிளக்கு பூஜை
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் மாட வீதியில் அமைந்துள்ள செல்வவிநாயகா் மற்றும் மகாலட்சுமி தாயாா் கோயிலின் 9-ஆவது ஆண்டு விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் மாட வீதியில் அமைந்துள்ள செல்வவிநாயகா் மற்றும் மகாலட்சுமி தாயாா் கோயிலின் 9-ஆவது ஆண்டு விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மன நிம்மதி, உடல் ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, புத்திர பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக மகாலட்சுமித் தாயாரை வழிபட்டனா். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.