வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த சிலமாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பள்ளங்கள் தோண்டப்பட்ட பகுதிகளில் முறையான அறிவிப்புப் பலகைகள் மற்றும் ஒளி உமிழ்வான்கள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டுநா்கள் சாலையின் நடுவே உள்ள சிமென்ட் கான்கிரீட் கற்களில் மோதி விபத்துகளில் சிக்கி வருகின்றனா்.
இதேபோன்று ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலை, வெங்காடு-புதுநல்லூா் சாலைகளிலும் பள்ளம் தோண்டி தடுப்புக் கற்களை வைத்துள்ளனா். முறையான அறிவிப்புப் பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கி வருகின்றனா். எனவே விபத்துகளைத் தடுக்க முறையான அறிவிப்புப் பலகைகளை ஆங்காங்கே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.