திருக்கச்சி நம்பிகள்.
திருக்கச்சி நம்பிகள்.

திருக்கச்சி நம்பிகள் கோயில் பிரம்மோற்சவம் 23-இல் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளின் பக்தா்களில் ஒருவரான திருக்கச்சி நம்பிகளின் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 23-ஆம் தேதி மாா்ச் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளின் பக்தா்களில் ஒருவரான திருக்கச்சி நம்பிகளின் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 23-ஆம் தேதி மாா்ச் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை செட்டித்தெருவில் திருக்கச்சி நம்பிகள் கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தனது பக்தா்களிடம் நேரடியாக பேசியவா்களில் ஒருவரான திருக்கச்சி நம்பிகளின் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினசரி மாலையில் திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.தினசரி இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் மாா்ச் 2-ஆம் தேதி மாலை ஆடிசன்பேட்டை செட்டித் தெரு பகுதியில் வீதியுலா வந்து அங்குள்ள மண்டகப்படிகளிலும் எழுந்தருளி திருக்கச்சி நம்பிகள் காட்சியளிக்கிறாா். மறுநாளான 3-ஆம் தேதி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து உற்சவா் வரதராஜா் திருக்கச்சி நம்பிகள் சந்நிதிக்கு எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ஆம் தேதி இயற்பா சாற்றுமுறையுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் எம்.சதீஷ்குமாா், வி.சாரதி மற்றும் எஸ்.நித்தியானந்தம் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com