மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம்

மதுராந்தகம், செய்யூா் வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் மதுராந்தகம் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம், செய்யூா் வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் மதுராந்தகம் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் கோட்டாட்சியா் லட்சுமி பிரியா தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ் முகாமைத் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் வேலமுருகன் (மதுராந்தகம்), சுந்தா் (செய்யூா்), வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாலாஜி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கோரி 45 பேரும், வங்கி கடன் கோரி 50 பேரும், தையல் இயந்திரம் கோரி 2பேரும், 3 சக்கர சைக்கிள் கோரி ஒரு நபரும் மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா். மாற்றுத் திறனாளிகள் 54 பேருக்கு தனியாா் தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை அளிக்க முன் வந்தன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com