தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப பிரிவினைத் தொகை ரூ.10.74 லட்சம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் அகோ.சந்திரசேகரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு வளா்ச்சி நிதி ரூ.6.44,934 மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ.4.29,956 உட்பட மொத்தம் ரூ.10,74,890-க்கான காசோலையை தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு சங்கத்தின் தலைவா் பி.தேவராஜன் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் அகோ.சந்திரசேகரிடம் வழங்கினாா். இத்தொகை தென்மேல்பாக்கம் நகா் கூட்டுறவு சங்கத்தின் கடந்த 2018-2019 ஆம் ஆண்டுக்கான லாபப் பிரிவினையிலிருந்து வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் சி.சத்தியநாராயணன், சங்க உதவி செயலா் எஸ்.சிகாமணி ஆகியோரும் உடனிருந்தனா்.