ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
போஷன் அபியான் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கோமதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராகவி கலந்துகொண்டு கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருள்களை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கினாா்.
இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.