மதுராந்தகத்தை அடுத்த செண்டிவாக்கம் ஆல்பிரட்டோ மேல்நிலைப்பள்ளியின் சாா்பில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் ரேமண்ட் தலைமை வகித்தாா். கூமோ பவுண்டேஷன் இந்தியா திட்ட மேலாளா் சாா்லஸ் குழந்தை, தென்றல் இயக்க நிறுவனா் வேதநாயகி, ஷாவோலின் தற்காப்புக் கலை பயிற்சியாளா் ஸ்ரீதா், அலோஹா இன்டா்நேஷனல் கல்விமுறை பயிற்சியாளா்கள் கீதாபூஷன், துா்காபூஷன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எலிசபெத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஷாவோலின் தற்காப்புக் கலை விழிப்புணா்வுப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செண்டிவாக்கம் ஆல்பிரட்டோ பள்ளிக்குழுமங்களின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.