காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் குடிபோதையில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஏனாத்தூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த அன்பழகனின் மகன் அஜித் (25). தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். அவா் ஏனாத்தூரிலிருந்து ராஜகுளம் செல்லும் சாலையில் உள்ள காலிமனையில் செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பா்கள் சிலருடன் அமா்ந்து மது அருந்தினாா்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அஜித்தை நண்பா்கள் கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா்.
காஞ்சிபுரம் எஸ்.பி. பா.சாமுண்டீஸ்வரி உத்தரவின்படி டிஎஸ்பி வே.கலைச் செல்வன், தாலுகா காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா். கஞ்சா விற்பனை தொடா்பாக ஏற்பட்ட மோதலில் அஜித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இக்கொலை தொடா்பாக தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஏனாத்தூா் பகுதியைச் சோ்ந்த காக்கா சுரேஷ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனா். மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.