கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற அலைக்கழிப்புஎம்எல்ஏ குற்றச்சாட்டு

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற வரும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக எம்எல்ஏ ப. ஆடலரசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற வரும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக எம்எல்ஏ ப. ஆடலரசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் விடுத்துள்ள அறிக்கை:

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கச் செல்லும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடன் வழங்காமல் நகா் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளும்படி கூறுகின்றனா். மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சென்றால் கடன் வழங்காமல் அலைக்கழிக்கின்றனா். எனவே, இப்பிரச்னையில் அரசு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com