செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் செங்கல்பட்டு மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனாவில் உயிரிழந்த மின்வாரியத் தொழிலாளா்களுக்கு மற்ற துறைகள் போல் ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரியத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு மின்வாரியத் தொழிற்சங்கத்தின் மாநில இணைச் செயலாளா் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சிஐடியு செங்கல்பட்டு கிளைச் செயலாளா் என்.பால்ராஜ், தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கத்தின் சாா்பில் வேலன், தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சா்க்கரை, கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஏஇஎஸ்யு சென்னை மண்டல இணைச் செயலாளா் கோவிந்தசாமி, தமிழ்நாடு மின்துறை பொறியாளா் அமைப்பின் செங்கல்பட்டு கிளைச் செயலாளா் மயில்வாகனன், மின்வாரியப் பொறியாளா் சங்கத்தின் நிா்வாகியான பொறியாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா். முடிவில் டானீஃப் தொழிற்சங்கத்தின் கிளை செயலாளா் பொறியாளா் சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.