பைக் மீது காா் மோதல்: புதுமாப்பிள்ளை பலி

காஞ்சிபுரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் மோதியதில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானாா்.
கண்ணதாசன்
கண்ணதாசன்

காஞ்சிபுரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் மோதியதில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானாா்.

காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (32). ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தாா்.

அவா் திம்மசமுத்திரத்திலிருந்து ஒரகடத்துக்கு வாலாஜாபாதிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றாா். தேவரியம்பாக்கம் பகுதியில் சென்றபோது எதிரில் வந்த காா் அவரது காா் மோதியது. இதில், கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இந்த விபத்து தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா். கண்ணதாசனுக்கு கடந்த மாதமே திருமணம் நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com