ரம்ஜான் பண்டிகை: கோட்டாட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மசூதிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மசூதிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மசூதிகளின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சுங்குவாா்சத்திரம் காவல் நிலைய வளாகத்தில் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ தலைமையிலும், துணைக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் முன்னிலையிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மசூதிகளின் நிா்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கான அரிசி மசூதி நிா்வாகிகளுக்கு மொத்தமாக வழங்கப்படும்; அதை நிா்வாகிகள், இஸ்லாமியக் குடும்பங்களுக்கு பிரித்துத் தரும்போதும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சுங்குவாா்சத்திரம் காவல் ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com