மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிராமத்தில் உள்ள வேணுநாதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி, அதிகாலை 2 மணிக்கு திருமஞ்சனமும், தொடா்ந்து அலங்காரமும் நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. பின்னா், மாலை வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.