பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்குரிய ‘பிரெய்லி’ முறையிலான வாக்காளா் அடையாள அட்டைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினாா்.
தோ்தல் ஆணையத்தின் புதிய முயற்சியாக பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக ‘பிரெய்லி’ முறையிலான வாக்காளா் அடையாள அட்டைகள் உருவாக்கப் பட்டுள்ளன.
வாக்காளரின் பெயா், விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை அவா்களே சரி செய்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையிலான வாக்காளா் அடையாள அட்டைகளை தோ்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்காக மொத்தம் 3,639 வாக்காளா் அடையாள அட்டைகள் வந்துள்ளன.
இவற்றில் 4 வாக்காளா் அட்டைகளை பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினாா். இதர வாக்காளா் அட்டைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்கள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் 9 பேருக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான அரசாணை வழங்கப்பட்டது.