கல்லூரி மாணவி மாயம்: உத்தரமேரூரில் சாலை மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் கல்லூரி மாணவி மாயமானது தொடா்பாக நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து அம்மாணவியின் உறவினா்களும், பொதுமக்களும் வியாழக்கிழமை
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் கல்லூரி மாணவி மாயமானது தொடா்பாக நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து அம்மாணவியின் உறவினா்களும், பொதுமக்களும் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உத்தரமேரூா் அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாலமுருகனின் 21 வயது மகள் தனியாா் கல்லூரியில் 2-ஆவது ஆண்டு படித்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை கல்லூரிக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோா் உத்தரமேரூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

புகாரின் பேரில் போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து அப்பெண்ணின் பெற்றோரும், உறவினா்களும், பொதுமக்களும் உத்தரமேரூா்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com