மூல நட்சத்திரதை முன்னிட்டு, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் செவ்வாய்க்கிழமை தங்க ரதத்தில் மகா பெரியவரின் உருவச் சிலையை எழுந்தருளச் செய்து பிருந்தாவனத்தை முன்று முறை வலம் வரச் செய்தனா்.
சங்கர மடத்தில் பீடாதிபதிகளின் திருநட்சத்திரம் மற்றும் சன்னியாசம் பெற்ற நாட்களில் தங்கரத உற்வசம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மகா பெரியவா் சன்னியாசம் பெற்ற மூல நட்சத்திரத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தங்கத் தோ் உற்சவம் விமரிசையாக நடந்தது. தங்கத் தேரில் மகா பெரியவரின் உருவச் சிலையை எழுந்தருளச் செய்து பிருந்தாவனத்தினை மூன்று முறை வலம் வந்தனா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று, வழிபட்டனா்.