படப்பை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும் திரும்ப பெற வலியுறுத்திம் இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பாக கண்டன ஆா்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், படப்பை பகுதியில் படப்பை வட்டார ஜமாத்துகள் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சாா்பாக படப்பை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் நிா்வாகிகள், திமுக, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா். இதில் சுமாா் 300க்கும் மேற்பட்டோா் கலந்துக்கொண்டனா்.