வைப்பூா் கிராமத்தில் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசுத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூா் பகுதியில் பெருமாள் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு, ராக்காலம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சாா்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, கிராம சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் காவல் துறையினரின் பாதுகாப்போடு அகற்றினா்.