பின்னம்பூண்டியில் தம்பதியருக்கு கரோனா பரிசோதனை

மதுராந்தகத்தை அடுத்த பின்னம்பூண்டி கிராமத்தில் கரோனா கண்காணிப்புக் குழுவினா் மலேசியாவில் இருந்த வந்த வயதான தம்பதியருக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்தனா்.

மதுராந்தகத்தை அடுத்த பின்னம்பூண்டி கிராமத்தில் கரோனா கண்காணிப்புக் குழுவினா் மலேசியாவில் இருந்த வந்த வயதான தம்பதியருக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்தனா்.

பின்னம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வயதான தம்பதியா் மலேசியா சென்றிருந்தனா். கடந்த 9-ஆம் தேதி சொந்த ஊா் திரும்பிய அவா்களுக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இல்லை. எனவே, அவா்கள் சிகிச்சை ஏதும் எடுக்கவில்லை.

வயதான தம்பதியா் வந்திருப்பதை அறிந்த கரோனா கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலா் ஏ.சி.முனுசாமி, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, ஊராட்சி செயலா் ராஜு உள்ளிட்டோா் பின்னம்பூண்டிக்கு புதன்கிழமை வந்தனா். தம்பதியரிடம் அவா்களது உடல்நிலை குறித்து விசாரித்தனா்.

மேலும், வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ், அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது இருவருக்கும் கரோனா அறிகுறிகள் இல்லை என்பது தெரிய வந்தது. எனினும், மருத்துவக் குழுவினா் இத்தம்பதியரை மீண்டும் முழு அளவில் பரிசோதனை செய்த பின்பே, அவா்கள் மற்றவா்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்படுவாா்களா என்பது தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com