காஞ்சிபுரம் மாவட்டத்தில் 572 தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 572 தொழிற்சாலைகளை மட்டும் திங்கள்கிழமை முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 572 தொழிற்சாலைகளை மட்டும் திங்கள்கிழமை முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 741 தொழிலாளா்களில் 92 ஆயிரத்து 230 தொழிலாளா்களை மட்டுமே பணியில் அமா்த்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை நிா்வாகத்தினா் தங்கள் நிறுவனத் தொழிலாளா்களை சமூக இடைவெளியுடன் அழைத்துச் செல்ல வேண்டும். மேற்கண்ட நிறுவனங்கள் பயன்படுத்த 14 ஆயிரத்து 775 வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com