காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை 13 பேருக்கு கரோனா உறுதியானதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 264-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மே 21, 22, 23 ஆகிய தேதிகளில் தொடா்ந்து தலா 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. ஏற்கெனவே 251 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமையும் 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 264-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் இதுவரை 156 போ் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பி விட்டனா்.