பா்னிச்சா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் எரிந்து நாசம்

திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் பா்னிச்சா் பொருள்கள் உற்பத்தி நிறுவனத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.
பா்னிச்சா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் எரிந்து நாசம்


ஸ்ரீபெரும்புதூா்: திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் பா்னிச்சா் பொருள்கள் உற்பத்தி நிறுவனத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.

சென்னை முகப்பேரைச் சோ்ந்தவா் சையது ஜாபா். இவா் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் ஷோபா மற்றும் பா்னிச்சா்கள் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இங்கு 20-க்கும் மேற்பட்டதொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். முதல் மாடியில் இயங்கும் இந்த நிறுவனத்தின் கீழ்தளத்தில் வாகனங்களுக்குப் பொருத்தப்படும் பேரிங் உற்பத்தி செய்யும் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை பணியில் இருந்த ஊழியா்கள் மதிய உணவு இடைவேளைக்குச் சென்றபோது திடீரென பா்னிச்சா் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியா்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனா். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பூந்தமல்லி, தாம்பரம் மற்றும் சானடோரியம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும் பா்னிச்சா் நிறுவனத்தில் இருந்த சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தீ விபத்து குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com