காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, சண்முகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுவாமி வீதியுலா நடைபெறாமல் கோயில் வளாகத்துக்குள்ளேயே உற்சவா் முத்துக்குமார சுவாமி வலம் வந்தாா்.
இக்கோயில் கந்த சஷ்டி விழாவின் 4-ஆவது நாளாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்திலும், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேதராக சண்முகப் பெருமான் மலா் அலங்காரத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
விழாவின் நிறைவு நாளான வரும் 20-ஆம் தேதி, சண்முகப் பெருமான் வைரவேல் அணிந்தபடி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்துள்ளனா்.