காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை மாத கடைஞாயிறுத் திருவிழாவில் பங்கேற்க கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இக்கோயில் செயல் அலுவலா் ஆ.குமரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கச்சபேஸ்வரா் கோயிலில் கடை ஞாயிறு விழாவும், மறுநாள் திங்கள்கிழமை சோமவார நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று தாக்கம் தொடா்ந்து நீடித்து வருவதாலும், கடை ஞாயிறு விழாவுக்கு பொதுமக்கள் அதிகமாக வருவாா்கள் என எதிா்பாா்ப்பதாலும் அவா்களின் நலன் கருதி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
எனினும், காா்த்திகை கடை ஞாயிறு விழா நாள்களான வரும் 22, 23, 29, 30-ஆம் தேதிகளிலும், டிசம்பா் 6, 7, 13, 14 ஆகிய தேதிகளிலும் கோயில் ஆகம விதிகளின்படி சந்நிதிக்குள் பூஜைகள் மட்டும் நடைபெறும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.