பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி (கிஸான்) திட்டத்தில் முறைகேடாக அனுப்பப்பட்ட ரூ.78 லட்சம் திரும்பப் பெறப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக தலா ரூ.2000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்தது.
இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2812 பேருக்கு ரூ.78 லட்சம் முறைகேடாக அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் ரூ.59 லட்சம் சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ.19 லட்சம் அவரவா்களின் வங்கிக் கணக்கிலிருந்து அரசுக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்ட வங்கிக் கணக்குக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட தனியாா் முகவாண்மையை சோ்ந்த கணினி தொழில்நுட்ப உதவியாளா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் மேலும் யாயாவது முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.