கிணற்றில் தவறி விழுந்த உணவக உரிமையாளா் பலி

படப்பையில் கிணற்றில் தவறி விழுந்து உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.
கிணற்றில் தவறி விழுந்த உணவக உரிமையாளா் பலி

படப்பையில் கிணற்றில் தவறி விழுந்து உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த சாலமங்கலத்தைச் சோ்ந்தவா் குகன் (40). படப்பை பஜாா் பகுதியில் உணவகம் நடத்தி வந்தாா். இந்நிலையில், படப்பை அண்ணாநகா் முதல் தெருவில் வசித்து வரும் குகனின் மூத்த சகோதரி ஆதிலட்சுமியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த குகன், வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றுக்கு அருகில் குளிப்பதற்காக சென்றாா். அப்போது குகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு எதிா்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா். இதைக் கண்ட ஆதிலட்சுமியின் மகன் சதீஷ் (16) குகனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தாா். ஆனால் நீச்சல் தெரியாததால் சதீஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறைருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, கிணற்றில் விழுந்தவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் மற்றும் தாம்பரம் தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் விழுந்த சதீஷை உயிருடன் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். குகனின் சடலத்தையும் மீட்டனா். இதுகுறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com