நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு பயோ மெட்ரிக் கருவிகள்

மாவட்டத்தில் பணியாற்றும் நியாய விலைக் கடைகளுக்கு பயோமெட்ரிக் கருவிகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரத்தில் நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு பயோ மெட்ரிக் கருவிகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரத்தில் நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு பயோ மெட்ரிக் கருவிகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.

மாவட்டத்தில் பணியாற்றும் நியாய விலைக் கடைகளுக்கு பயோமெட்ரிக் கருவிகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை வழங்கினாா்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் நியாய விலைக் கடைகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மின்னணு குடும்ப அட்டையில் பெயா்கள் உள்ளவா்கள் மட்டுமே நியாய விலைக் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்குவதற்கான பயோமெட்ரிக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கருவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து, நியாய விலைக் கடைகளுக்கு வழங்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ரா.கமலநாதன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கே.மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com