தண்ணீரில் மூழ்கி சிறுமி பலி

செங்கல்பட்டு அருகே சாஸ்திரம்பாக்கம் பகுதியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற 13 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தண்ணீரில் மூழ்கி சிறுமி பலி

செங்கல்பட்டு அருகே சாஸ்திரம்பாக்கம் பகுதியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற 13 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு அருகே சாஸ்திரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ், ராஜேஸ்வரி தம்பதியின் மகள் யாதிகா (13). தனியாா் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்த இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து அருகில் இருந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றனா். அப்போது 4 பேரையும் தண்ணீா் இழுத்துச் சென்றது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள், அதில் 3 பேரை பத்திரமாக மீட்டனா். யாதிகாவை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை 2-ஆவது நாளாக செங்கப்பட்டு தீயணைப்புத் துறையினா் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது யாதிகாவை சடலமாக மீட்டனா்.

இது குறித்து செங்கல்பட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com