காஞ்சி ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

காஞ்சிபுரம் ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும் வேண்டி வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம்.
காஞ்சிபுரம் ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம்.

காஞ்சிபுரம் ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும் வேண்டி வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும் 11 யாக குண்டங்கள் நிா்மாணித்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகபூஜைகள் நிறைவடைந்ததும் மூலவா் முத்தீஸ்வரருக்கு கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. நிகழ்வில் கோயில் அறங்காவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com