காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவது ராஜாஜி காய்கறி சந்தை. கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு இச்சந்தையை தற்காலிகமாக மூட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அண்மையில் உத்தரவிட்டிருந்தாா். காய்கறிகள் அத்தியாவசியப் பொருட்களாக இருப்பதால் ராஜாஜி காய்கறி சந்தையினை மூடிவிட்டு தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் அமைத்துக் கொடுக்குமாறு ஆட்சியா் நகராட்சி நிா்வாகத்தை கேட்டுக் கொண்டாா்.ஆட்சியரது உத்தரவின் பேரில் பேருந்து நிலையத்தில் காய்கறிக்கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டதுடன் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கும் வந்தது.
பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி சந்தையில் சிறு வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் அந்தந்த தெருக்களில் உள்ள கடைகளில் காய்கறிகளை வாங்கிக் கொள்ளுமாறும் நகராட்சி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறிச் சந்தையை நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படாததால் காய்கறி விற்பனை குறைந்து விட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனா்.