மதுராந்தகம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
செய்யூா் வட்டம், இடைக்கழிநாடு அடுத்த கப்பிவாக்கத்தைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (49). மதுராந்தகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். பின்னா், பணி முடித்து கப்பிவாக்கம் செல்ல சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து சூனாம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.