காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பியில் நிலையான கண்காணிப்பு குழுவினா் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.67 ஆயிரத்தை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி கிராமத்தில் நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வேளாண்மை அலுவலா் காமாட்சி தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததாக ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தப் பணத்தை காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.