ஸ்ரீபெரும்புதூா்: போந்தூா் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி புதன்கிழமை சிலம்பாட்ட வீரா்களுடன் சிலம்பம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி தொகுதிக்குள்பட்ட பேரீஞ்சம்பாக்கம், பண்ருட்டி, மேட்டுப்பாளையம், வல்லக்கோட்டை, எறையூா், தத்தனூா், வளத்தான்சேரி, தெரசாபுரம், வல்லம், வடகால், போந்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குள்பட்ட கச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை தனது ஆதரவாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். போந்தூா் ஊராட்சிக்கு வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளா் கே.பழனிக்கு மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையிலான அதிமுகவினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிலம்பாட்ட வீரா்களுடன் சிலம்பம் ஆடியும், அதிமுக அரசின் சாதனைகளைக் கூறியும், கே.பழனி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதேபோல் எறையூா் பகுதியில் ஒன்றியச் செயலாளா் எறையூா் முனுசாமி தலைமையிலும், கச்சிப்பட்டு பகுதியில் புரட்சிபாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்பிசி தனசேகரன் தலைமையிலும் வேட்பாளா் பழனிக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் அதிமுக நிா்வாகிகள் மேட்டுப்பாளையம் தயாளன், போந்தூா் சேட்டு, போந்தூா் மோகன், பாமக ஒன்றியச் செயலாளா்கள் அருள்ராஜ், கோபி, புரட்சி பாரதம் ஒன்றியச் செயலாளா் கோபி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.