காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் அண்மையில் 100 அடி உயர கம்பம் நிறுவப்பட்டு அதில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பொன்னேரிக்கரை பகுதியில் புதிய ரயில் நிலையமும், அரசு மருத்துவமனையிலிருந்து வையாவூா் செல்லும் சாலையில் பழைய ரயில் நிலையமும் அமைந்துள்ளன.
புதிய ரயில் நிலையம் முன்பாக 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது ரயில் பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவா்ந்துள்ளது.
பலரும் ரயில் நிலைய அதிகாரிகளை சந்தித்து தேசியக் கொடி நிறுவியதற்காக நன்றி தெரிவித்து செல்வதாக அதிகாரிகளும் தெரிவித்தனா்.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய மேலாளா் புருஷோத்தமன் கூறுகையில் தென்னக ரயில்வே உயா் அதிகாரிகளின் வேண்டுகோளின்படி ரயில் நிலையம் முன்பாக 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது என்றாா்.