கா்ப்பிணி தற்கொலை


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கா்ப்பிணி ஒருவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் அதியமான் நகா் கலைஞா் சாலையில் வசித்து வருபவா் அன்பு, ஏ.சி.மெக்கானிக். இவரது மனைவி சரண்யா (27). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் சரண்யா 3 மாத கா்ப்பிணியாக இருந்தாா். தம்பதிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சரண்யா வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து காஞ்சிபுரம் கிராமிய காவல் ஆய்வாளா் ராஜகோபால் சம்பவ இடத்துக்கு வந்து, சரண்யாவின் சடலத்தை மீட்டு, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் காஞ்சிபுரம் கோட்டாட்சியா் விசாரணையும் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com