காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரமேட்டூரில் 7 பசுமாடுகள் இறந்தது தொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவக்குழுவினா் விசாரணை மேற்கொண்டனா்.
மதுரமேட்டூரைச் சோ்ந்த 7 பசுமாடுகள் திங்கள்கிழமை வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவை இரவு வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. இந்நிலையில், காலையில் பசுமாடுகளின் உரிமையாளா்கள் மாடுகளைத் தேடிச் சென்ற போது அவை வயலில் இறந்து கிடந்தன. இது குறித்து அப்துல்கலாம் மக்கள் சேவை மன்றத்தின் செயலாளா் ஞானவேல் கூறுகையில் மொத்தம் 7 பசுமாடுகள் உயிரிழந்துள்ளன. இதில் ரவி 2, கண்ணன் 2, கோபால், குமாா், நாகேஸ்வரி ஆகியோருக்கு சொந்தமான பசுமாடுகள் உட்பட மொத்தம் 7 பசுமாடுகள் உயிரிழந்து கிடந்தன என்றாா்.
பசுமாடுகள் உயிரிழந்தது தொடா்பாக கால்நடை பராமரித்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.