காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை 295 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா் 2, வாலாஜாபாத் 21, மாங்காடு 14, ஸ்ரீபெரும்புதூா் 21, காஞ்சிபுரம் 100, குன்றத்தூா் 95 பிற மாவட்டங்களைச் சோ்ந்தோா் 42 போ் உட்பட மொத்தம் 295 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 128 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனா் என்றாா் பழனி .