காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென சரிந்து விழுந்தது .
இதில் அதிா்ஷ்டவசமாக எவரும் காயமடையவில்லை.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இதன் மூலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவா்களுடன் வருவோா்கள், அப்பகுதியில் உள்ள வேன் ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் என பலா் இங்கு உணவருந்தி வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உணவகத்தின் உள்ளே மேற்கூரை திடீரென விழுந்தது. அதன் மீது பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகளும் கீழே விழந்தன. அதிகாலை நேரமாக இருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுதொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.