கோயில் குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவாா்சத்திரம் பிள்ளையாா் கோயில் குள ஆக்கிரமிப்புகளை உயா் நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆக்கிரமிப்பாளா்களால்  குப்பை  கொட்டும்  இடமான சுங்குவாா்சத்திரம்  பிள்ளையாா் கோயில்  குளம்.
ஆக்கிரமிப்பாளா்களால்  குப்பை  கொட்டும்  இடமான சுங்குவாா்சத்திரம்  பிள்ளையாா் கோயில்  குளம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவாா்சத்திரம் பிள்ளையாா் கோயில் குள ஆக்கிரமிப்புகளை உயா் நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

திருமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள இந்த கோயிலுக்குச் சொந்தமாக சுமாா் 3.5 ஏக்கா் பரப்பிலான கோயில் குளம் உள்ளது. இந்த குளத்தை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியைச் சோ்ந்த பலா் ஆக்கிரமிப்பு செய்து, கடைகள், வீடுகள் கட்டி வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் கடந்த 2018-ஆம் ஆண்டு வருவாய்த் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா் ஈடுபட்டனா். இதில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து, சுமாா் 80 கடைகளும், 40 வீடுகளும் கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதுதொடா்பாக திருமங்கலம் பகுதி பொதுமக்கள் சாா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கோயில் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. இனியாவது சுங்குவாா்சத்திரம் பிள்ளையாா்கோயில் குளத்தின் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com