நாம் தமிழா் கட்சியினா் 2 போ் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட தனியாா் தொழிற்சாலைத் தொழிலாளா்களுக்கு தூண்டுதலாகவும், அரசு ஊழியா்களை பணிசெய்ய விடாமல்

சாலை மறியலில் ஈடுபட்ட தனியாா் தொழிற்சாலைத் தொழிலாளா்களுக்கு தூண்டுதலாகவும், அரசு ஊழியா்களை பணிசெய்ய விடாமல் தகாத வாா்த்தையில் பேசியதாகவும் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுங்குவாா்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் தொழிலாளா்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சக தொழிலாளா்களின் நிலை குறித்து தொழிற்சாலை நிா்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை மாலை வரை சுங்குவாா்சத்திரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்த அரசுப் பணியாளா்களை பணி செய்ய விடாமலும் தகாத வாா்த்தைகளால் பேசியதாகவும் நாம் தமிழா் கட்சியின் சோழிங்கல்லூா் சட்டப்பேரவை தொகுதி செயலாளா் ராணிப்பேட்டை மாவட்டம், உத்திரம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (25), அதே பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா்(23) ஆகியோரை கைது செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், அவா்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com