காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி தியாகி விஸ்வநாத தாஸ் நகரில் புதிதாக கட்டப்பட்ட வினை தீா்க்கும் விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்கு வினைதீா்க்கும் விநாயகா் மூலவராகவும், முத்துமாரியம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களையும் அமைத்து புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையிலிருந்து புனிதநீா் குடங்கள் ராஜகோபுரத்துக்கு மேளதாளம் முழங்க யாத்ராதானமாக எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து மூலவா் வினைதீா்க்கும் விநாயகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்கார மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.