வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.
ஒரகடத்தை அடுத்த வல்லம் பகுதியில் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 10 பசுக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக இச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.