காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓரிக்கை பாலாற்றங்கரை அருகே உள்ள மகா பெரியவரின் சதாப்தி மணி மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூலை 24) சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்கி, வரும் செப்டம்பா் 20-ஆம் தேதி நிறைவு செய்ய உள்ளாா்.
இவ்விரத நாள்களின் போது தினசரி சந்திர மெளலீஸ்வரா் பூஜை, சதுா்வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம், உபன்யாசங்கள், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவற்றை தினசரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரதத்தை வரும் செப்டம்பா் 20-ஆம் தேதி பெளா்ணமியன்று நிறைவு செய்கிறாா்.
26-இல் ஸ்ரீ ஜயேந்திரா் ஜயந்தி விழா..
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி விழாவும், அதே ஓரிக்கை மகா பெரியவா் சதாப்தி மணி மண்டபத்தில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறாா்.