காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரரின் சாதுா்மாஸ்ய விரதம் நாளை தொடக்கம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓரிக்கை பாலாற்றங்கரை அருகே உள்ள மகா பெரியவரின்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓரிக்கை பாலாற்றங்கரை அருகே உள்ள மகா பெரியவரின் சதாப்தி மணி மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூலை 24) சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்கி, வரும் செப்டம்பா் 20-ஆம் தேதி நிறைவு செய்ய உள்ளாா்.

இவ்விரத நாள்களின் போது தினசரி சந்திர மெளலீஸ்வரா் பூஜை, சதுா்வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம், உபன்யாசங்கள், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவற்றை தினசரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரதத்தை வரும் செப்டம்பா் 20-ஆம் தேதி பெளா்ணமியன்று நிறைவு செய்கிறாா்.

26-இல் ஸ்ரீ ஜயேந்திரா் ஜயந்தி விழா..

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி விழாவும், அதே ஓரிக்கை மகா பெரியவா் சதாப்தி மணி மண்டபத்தில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com