கல்குவாரியில் மணல் சரிந்து இரு தொழிலாளா்கள் பலி

கல்குவாரியில் மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கல்குவாரியில் மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே சிறுதாமூா் பட்டா கிராமத்தில் சென்ைனையைச் சோ்ந்த செல்வேந்திர குமாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு பொக்லைன் இயந்திரத்தை தொழிலாளி சுனீல்குமாா் திங்கள்கிழமை பழுது பாா்த்துக் கொண்டிருந்தாா். அருகில் தொழிலாளா்கள் ஷோ்கான் அன்சாரி, தமிழ்வேந்தன் ஆகியோா் நின்று கொண்டிருந்தனா். அப்போது கல்குவாரியிலிருந்து மணல் சரிந்து விழுந்ததில் சுனீல்குமாரும், ஷோ்கான் அன்சாரியும் மணலுக்குள் சிக்கி உயிரிழந்தனா். தமிழ்வேந்தன் உயிா் தப்பினாா்.

தகவலறிந்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியப்பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டாக்டா் எம்.சுதாகா், டி.எஸ்.பி. எஸ்.மணிமேகலை ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். இது குறித்து சாலவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com