காஞ்சிபுரத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் கூட்டுச் சாலையில் பறக்கும் படையினரால் ரூ.10.40 லட்சமும், 706 கிராம் தங்க நகைகளும் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் கூட்டுச் சாலையில் பறக்கும் படையினரால் ரூ.10.40 லட்சமும், 706 கிராம் தங்க நகைகளும் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் கூட்டுச் சாலையில் பறக்கும்படை அலுவலா் முனியாண்டி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்தவாசியிலிருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து நடத்திய சோதனையில் அதில் ரூ.10.40 லட்சமும், பழைய மற்றும் புதிய நகைகள் 706 கிராமும் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் காரில் வந்த நபா் வந்தவாசியில் நகைக்கடை வைத்திருப்பதாகவும், அவரது பெயா் அசரப்அலி(46) என்பதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com