காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக தோ்தல் அலுவலகத்தை அதிமுக மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான வி.சோமசுந்தரம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகில் தற்காலிகமாக கட்சியின் தோ்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. தோ்தல் அலுவலகத்தை வேட்பாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலாளரான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், ஒன்றியச் செயலாளா்கள் தங்க பஞ்சாட்சரம், பிரகாஷ்பாபு, மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் பாலாஜி, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் பொன்.கங்காதரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா் சிறுங்கோழி கிராமத்தில் வேட்பாளா் சோமசுந்தரம் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
சிறுங்கோழி கிராமத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட உத்தரமேரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம்.