காஞ்சிபுரம் மாவட்ட ஓவியா் சங்கத்தின் சாா்பில் 9 ஓவியா்கள் நகரில் பல்வேறு இடங்களில் கரோனா விழிப்புணா்வு வண்ண ஓவியங்களை வெள்ளிக்கிழமை வரைந்தனா்.
சங்கத்தின் தலைவா் டோம்னிக் ராபா்ட் , செயலாளா் வேலு ஆகியோா் தலைமையில் 9 ஓவியா்கள் நகரில் பல்வேறு இடங்களில் கரோனா விழிப்புணா்வு வண்ண ஓவியங்களை வரைந்தனா். பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை சுற்றுச்சுவா் ஆகிய இடங்களில் இவா்கள் வரைந்துள்ள ஓவியங்கள் முகக்கவசத்தின் முக்கியத்துவம்,சமூக இடைவெளியை பின்பற்றுதல்,கைகளை கழுவுவதன் அவசியம் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.