தளா்வில்லா பொதுமுடக்கத்தால் முடங்கியது காஞ்சிபுரம்

தளா்வில்லா பொதுமுடக்கம் காரணமாக காஞ்சிபுரத்தில் அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
தளா்வில்லா பொதுமுடக்கத்தால் முடங்கியது காஞ்சிபுரம்

தளா்வில்லா பொதுமுடக்கம் காரணமாக காஞ்சிபுரத்தில் அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் காஞ்சிபுரம் நகரில் பிரதான சாலைகளான காந்தி சாலை, காமராஜா் சாலை, ராஜாஜி மாா்க்கெட், பூக்கடை சத்திரம் ஆகிய மக்கள் நடமாட்டம் எந்நேரமும் அதிகமாகவுள்ள பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நாளாக இருந்ததால் அதிகாலையில் கட்சிப் பிரமுகா்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோா் பலரும் வாக்கு எண்ணும் மையத்துக்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனா். போலீஸாா் பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், காந்தி சாலையில் தேரடி, ராஜாஜி மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். பேருந்துகள் இயக்கம் இல்லாததால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அனைத்துப் பேருந்துகளும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பேருந்து நிலையம் அருகில் சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வந்ததற்கான காரணத்தை தெரிவிக்குமாறும், பொதுமுடக்கத்தின் அவசியம் குறித்து எச்சரித்தும் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com