போந்தூா், வல்லக்கோட்டை பகுதிகளில் கரோனா பரிசோதனை தீவிரம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட போந்தூா் மற்றும் வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்களை மண்டல அலுவலா் ஸ்டீபன் ஜெயசந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
போந்தூா்  பகுதியில்  நடைபெற்ற  கரோனா  பரிசோதனை  முகாமைப்  பாா்வையிட்ட  மண்டல  அலுவலா்  ஸ்டீபன் ஜெயசந்திரன்.
போந்தூா்  பகுதியில்  நடைபெற்ற  கரோனா  பரிசோதனை  முகாமைப்  பாா்வையிட்ட  மண்டல  அலுவலா்  ஸ்டீபன் ஜெயசந்திரன்.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட போந்தூா் மற்றும் வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்களை மண்டல அலுவலா் ஸ்டீபன் ஜெயசந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், ஒன்றிய நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை போந்தூா் மற்றும் வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன. இந்த பரிசோதனை முகாம்களை மண்டல அலுவலா் ஸ்டீபன் ஜெயசந்திரன் நேரில் ஆய்வு செய்தாா். இதையடுத்து, பால்நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட கண்டிகை பகுதியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மண்டல அலுவலா் ஸ்டீபன் ஜெயசந்திரன் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் சம்பத், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுநாதன், தூய்மை பாரத வட்டார ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், போந்தூா் ஊராட்சி செயலா் இரா.ரமேஷ், வல்லக்கோட்டை ஊராட்சிச் செயலா் சுந்தரம் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டனா்.

இந்த பரிசோதனை முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com